நாடாளுமன்ற தேர்தல் : வேட்பாளர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Date:

நாடாளுமன்ற தேர்தலில் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்களை வேட்பாளர்களாக நியமிக்கவேண்டாம் என தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் (PAFFREL) வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீதிமன்றத்தினால் ஊழல் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தண்டனை விதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக நியமிக்க கூடாது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வோரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்தால் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் பொதுமக்களிற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வன்முறையற்ற விதத்தில் இடம்பெற்றுள்ள சூழ்நிலையில் அரசியல் கட்சிகளை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேசிய பட்டியல் வேட்பாளர்களாக நியமிப்பதற்கு தகுதியானவர்களை அரசியல் கட்சிகள் தெரிவு செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டியலில் ஒரு வேண்டத்தகாத வேட்பாளர் நியமிக்கப்பட்டாலும் அது ஒட்டுமொத்த கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

விரும்பத்தகாத அரசியல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படுவதை தவிர்க்கும் விதத்தில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...