பத்ஹுல்லாஹ் குலன் உயிரிழப்பு!

Date:

2016ஆம் ஆண்டு துருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் FETO அமைப்பின் தலைவரான ஃபத்ஹுல்லாஹ் குலன் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FETO பயங்கரவாத அமைப்பு என துருக்கி அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் அமைப்பின் தலைவரான இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நேற்று உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 83.

துருக்கியில் 2016 ஆம் ஆண்டு ஜுலை 15 ஆம் திகதி இந்த அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 251 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

1999 முதல் அமெரிக்காவில் வாழ்ந்த வந்த ஆன்மீக போதகரான ஃபத்ஹுல்லாஹ் குலன் தலைமையில் (G)கெலன் என்ற இஸ்லாமிய சகோதர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் FETO அமைப்பின் தலைவரான குலன், துருக்கி தலைவர்களால் வெளியேற்றப்பட வேண்டும் என கோரிக்கைககள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...