காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையின் இரண்டாவது அழிவுகரமான ஆண்டை எட்டுகின்ற நிலையில் பஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பது இப்போது அனைவருக்கும் ‘தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமை’ என்று முன்னாள் கிரேக்க வெளியுறவு அமைச்சர் ஜியோர்கோஸ் கட்ரூகலோஸ் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘காசாவிலும் மேற்குக் கரையிலும் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் காண்கிறோம். பலஸ்தீன அரசு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா பொதுச் சபை பலமுறை கூறியுள்ளது. கடந்த ஆண்டில், இஸ்ரேல் காசாவில் 140,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது, காயப்படுத்தியுள்ளது.
அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், முற்றுகையிடப்பட்ட பகுதியின் பரந்த பகுதிகளை அழித்து,மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயர்ந்து இடைவிடாத தாக்குதல்களின் அச்சுறுத்தலின் கீழ் தொடர்ந்து இஸ்ரேல் நகர்த்தியுள்ளது.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவத்தால் பிடிக்கப்பட்ட மொத்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை இப்போது 10,000க்கும் அதிகமாக இருப்பதால், தடுப்புக்களும் கைதுகளும் அதிகரித்துள்ளன.
பலஸ்தீனியர்களுக்கு எதிரான குடியேற்ற வன்முறைகள் மேலும் பலஸ்தீன நிலங்களைக் கைப்பற்றும் முயற்சிகளுடன் கடுமையாக அதிகரித்துள்ளன.
பலஸ்தீன அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய காட்ரூகலோஸ் இஸ்ரேலுக்கு எதிராக சட்டப்பூர்வ சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.