புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் உடனடியாக இடைநிறுத்தம்!

Date:

நடந்து முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் 3 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானது தொடர்பில் எழுந்து சர்ச்சைகளை தொடர்ந்து பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே குறித்த 3 வினாக்களுக்கும் உரிய மொத்த புள்ளிகளைகளையும் மாணவர்களுக்கு வழங்குவது என கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்த போதிலும் குறித்த 3 கேள்விகள் மட்டுமல்லாது மொத்தமாக 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானதாக பெற்றோர் முன்வைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த 8 வினாக்கள் தொடர்பாக ஆதராங்களுடன் முன்வைக்குமாறு பெற்றோரை கேட்டிருப்பதாகவும் இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் விசாரணைகளை தொடர்ந்து மாணவர்களுக்கு பெருமளவில் அநீதி ஏற்படாதாவாறு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அதுவரை தற்காலிமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...