நடந்து முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் 3 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானது தொடர்பில் எழுந்து சர்ச்சைகளை தொடர்ந்து பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே குறித்த 3 வினாக்களுக்கும் உரிய மொத்த புள்ளிகளைகளையும் மாணவர்களுக்கு வழங்குவது என கல்வி அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்த போதிலும் குறித்த 3 கேள்விகள் மட்டுமல்லாது மொத்தமாக 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானதாக பெற்றோர் முன்வைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த 8 வினாக்கள் தொடர்பாக ஆதராங்களுடன் முன்வைக்குமாறு பெற்றோரை கேட்டிருப்பதாகவும் இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் விசாரணைகளை தொடர்ந்து மாணவர்களுக்கு பெருமளவில் அநீதி ஏற்படாதாவாறு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அதுவரை தற்காலிமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.