புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம் : கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமனம்

Date:

2024ம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி அமைச்சு  மற்றுமொரு குழுவினை நியமித்துள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இருவர் மற்றும் பேராசிரியர்கள் இருவர் அந்தக் குழுவில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த குழுவின் ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...