எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குள் வந்த அவர் பிரதியமைச்சர் , அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மற்றுமொரு பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளதுடன் திரைப்பட தயாரிப்பிலும தனது ஆர்வத்தை செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.