மிகுதிப் பணத்தை வழங்காத நடத்துநர்களுக்கு எதிராக முறைபாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Date:

பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதாவது, பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துநர்கள் மீது முறைப்பாடு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு, குறித்த முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேருந்து நடத்துநர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...