அறுகம்பை பகுதியிலிருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள்

Date:

இலங்கையின் அறுகம்பை உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கடற்கரையோரங்களை அடிப்படையாக வைத்து பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கிடைத்துள்ள புதிய தகவலை தொடர்ந்தே இந்த வேண்டுகோளை விடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் எவ்வகையான அச்சுறுத்தல் என்பது குறித்து விசேடமாக எதனையும் குறிப்பிடாத இஸ்ரேலிய அரசாங்கம் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுஇடங்களில் பலர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை நடத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு தரப்பினர் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...