அறுகம்பை பகுதியிலிருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள்

Date:

இலங்கையின் அறுகம்பை உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கடற்கரையோரங்களை அடிப்படையாக வைத்து பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கிடைத்துள்ள புதிய தகவலை தொடர்ந்தே இந்த வேண்டுகோளை விடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் எவ்வகையான அச்சுறுத்தல் என்பது குறித்து விசேடமாக எதனையும் குறிப்பிடாத இஸ்ரேலிய அரசாங்கம் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுஇடங்களில் பலர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை நடத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு தரப்பினர் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...