லெபனானின் வங்கிக் கிளைகளைக் குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்

Date:

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திப் பிரகாரம், இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை  ஆதரிக்கும் வங்கி கிளைகளைக் குறிவைத்து லெபனானில் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அல்-கார்ட் அல்-ஹசன்  கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை  இலக்கு வைத்து  தாக்குதல் நடத்தப்பட்டன . பெய்ரூட் (Beirut) விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வங்கி கிளைகள், ஹிஸ்புல்லாவின் நிதி நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார். “ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக நிதியளிக்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...