இலங்கை அரபு எழுத்தணி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி செயலமர்வு நிறைவு பெற்றது.
26, 27ஆம் திகதிகளில் இரத்மலானை நெஸ்ட் எகடமியில் நடைபெற்ற இந்த பயிற்சி செயலமர்வில் ஜாமி நளீமியா (பேருவளை), மக்கியா அரபுக்கல்லூரி (காலி), தீனியா அரபுக் கல்லூரி (பான துற ) இ தாருல் உலூம் அரபுக் கல்லூரி (மொரட்டுவ- எகொடவின), ஹூமைதியா அரபுக் கல்லூரி ( ஊறுகொடவத்த – கொழும்பு), ஈமானிய அரபுத் கல்லூரி ( திஹாரி) ஆகிய நிறுவனங்களில் இருந்து 28 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் வளவாளர்களாக நாவலப்பிட்டி தாருல் உலூம் ஹாஷிமியா அரபுக் கல்லூரின் விரிவுரையாளர் அல்ல- ஆலிம் எஸ் மஜீம் யூசுப் (இந்தியா) மற்றும் மூதூர் ரப்புதுல் ஜன்னா அரபுக்கல்லூரின் விரிவுரையாளர் அல்- ஆலிம் என்.எம். சில்மி நூரி அவர்களும் கலந்துகொண்டனர்.
அரபுக்கல்லூரி இறுதி வருட மாணவர்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து பல பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதுடன் சுமார் 200 – 300 மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.
அவர்களிலிருந்து 20 -50 மாணவர்கள் 2025ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்படவுள்ள ஆறு மாத பயிற்சி நெறியில் பங்கு கொள்ள தகுதி பெறுவர். இப்பயிற்சி நெறி சர்வதேச பயிற்றுவிப்பாளர்களது உதவியோடு ஏற்பாடு செய்யப்படும்.
இலங்கை அரபு எழுத்தணி கழகம் 2017ம் ஆண்டு நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.