வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

Date:

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் கிருமி தொற்றுகள் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால்  விரைவில்  சிகிச்சை பெறுமாறு பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் உண்ணும் உணவுகள் சுத்தமாகவும், புதியதாகவும், சூடாகவும் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சுட்டாறிய நீரை  அல்லது போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நீரை அருந்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...