பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப இலக்கங்களை அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இன்று (16) பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களின் வேட்பாளர்களின் விருப்ப இலக்க பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகையும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.