2024 பொதுத்தேர்தல் கண்காணிப்புப் பணிக்கு தயாராகும் பெப்ரல்!

Date:

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்ற அமைப்புக்களில் பழமைவாய்ந்த அமைப்பான பெப்ரல் அமைப்பு, பொதுத்தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கான பணிகளை மும்முரமாக ஏற்பாடு செய்து வருகின்றது.

அந்தவைகயில் நாளை முதல் ஆரம்பிக்கப்படுகின்ற தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதிலிருந்து பொதுத்தேர்தலுடைய அனைத்து தேர்தல் விவகாரங்களையும் கண்காணிக்கும் வகையிலான ஏற்பாடுகளை பூர்த்தி செய்து அதற்கான தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்கின்ற பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள நாத்தாண்டி,வென்னப்புவ, ஆனமடுவ,சிலாபம், புத்தளம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கான கண்காணிப்பாளர்களை நியமனம் செய்து அவர்களுக்கான தேர்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்கும் நிகழ்வு இன்று புத்தளம் நகரில் நடைபெற்றது.

வளவாளராக சட்டத்தரணி தினேஷ் பெரேரா கலந்துகொண்டு தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினார்.

பெப்ரல் அமைப்பின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயற்படுகின்ற ஏ.ஸீ.எம்.ருமைஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பெப்ரல் அமைப்பின் கள உத்தியோகத்தர் தரிந்து ஹேரத்தும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடாத்தினார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...