‘Talk to Chairman’: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய வேலைத்திட்டம்

Date:

‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும்  ‘தலைவரிடம் சொல்லுங்கள்’ Talk to Chairman ‘ என்ற புதிய திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்க முடியும் எனவும்  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்  முறைப்பாடளிப்பவர்கள்  0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 0717 593 593 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாகவும் மற்றும்  talkchairman@slbfe.lk  என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...