அனுரவிற்கு பெரும்பான்மை கிடைப்பதற்காக எனது கட்சி தேர்தலில் போட்டியிடாது: விமல் வீரவன்ச

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கட்சி அறிவித்துள்ளது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தை உடைய அரசியல் இயக்கம் என்பதாலும் ஜேவிபியின் வரலாற்று பாரம்பரியத்தை மதிக்கும் அதற்கு உரித்தான கட்சி என்பதாலும் நாங்கள் ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவந்த மக்கள் ஆணையை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் என விமல்வீரவன்ச அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பாகிடைப்பதற்காக ன்மை தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவின்றி அனுரகுமாரதிசநாயக்க ஆட்சி புரியும் நிலையை ஏற்படுத்து தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி கூட்டணியாகவோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடபோவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...