அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய வரவு- செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்படும்!

Date:

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம் முன்வரும் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் அரச ஊழியர்களினது சம்பளத்தை ஜனவரி மாதத்திலிருந்து ரூ.25,000 சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது.

இந்த தீர்மானத்தின் படி ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிக்கப்படுமா? என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,

அரச ஊழியர்களுக்கு மட்டடுமல்ல பொதுவாகவே சம்பள அதிகிரப்பொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்று நாங்கள் ஏற்றுகொள்கிறோம். புதிய வரவு செலவு திட்டத்தில் இதனை உள்வாங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் புதிய வரவு செலவு திட்டம் புதிய அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...