முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்
இந்த சந்திப்பில், முன்னாள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பிற முன்னாள் நிதி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி. சிறிசேன, “இன்று நடந்த சந்திப்பு அரசியல் தொடர்பானது அல்ல. தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த கண்டி மக்களிடம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது,” என்றார்.
இந்த நட்புறவுச் சந்திப்பில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.