எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டி: கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள்

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அதனடிப்படையில், 966 பேர் ஆசனங்களுக்காக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்கள் உட்பட மொத்தம் 50 குழுக்கள் கொழும்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதுடன், இவற்றில் 46 குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.ஆகக் குறைந்த அயவில் பொலன்னறுவை மாவட்டத்தில் 13 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக் குழுக்களை உள்ளடக்கிய 120 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

 

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...