மேல்மாகாண ஆளுந‌ர் ஹனீப் யூசுபுக்கு மேமன் சங்கத்தால் சிறப்பு கௌரவிப்பு !

Date:

இலங்கை மேமன் சங்கம் மற்றும் உலக மேமன் அமைப்பின் ஏற்பாட்டில்   மேல்மாகாண ஆளுநரும் தொழிலதிபருமான ஹனீப் யூஸுபுக்கு சிறப்பு வரவேற்பு விழாவும் கௌரவிப்பு வைபவமும் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மேமன் சங்க வரவேற்பு நிலைய கேட்போர் கூடத்தில் அண்மையில் நடாத்தப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவினால்  மேல் மாகாண ஆளுநராக நியமனம்  பெற்ற தொழிலதிபர் ஹனீப் யூஸுப்  மேமன் சமூகத்தைச்  சேர்ந்த சிறுபான்மை மக்கள் சமூகப் பிரதிநிதியுமாவார்.
மேல் மாகாணத்தின் 12வது  ஆளுநரான இவர் மேமன் சமூகத்திலிருந்து  ஆளுநராக உயர் பதவி அச்சமூகத்தின் முதலாவது பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேல் மாகாண ஆளுநருக்கான இந்த சிறப்பு பாராட்டு விழாவில் ஸ்ரீலங்கா மேமன் சங்கம் உலக மேமன் அமைப்பின் பெருமளவிலான பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் புரவலர் ஹாசிம் உமர், சமூக ஆர்வலர் சிராஸ் யூனூஸ்  ஆகியோரால் ஆளுநர் பாராட்டப்பட்டதுடன்   சிறப்பு ஞாபகார்த்த சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேல் மாகாண புதிய ஆளுநர் ஹனீப் யூசுப், உலக  மேமன் அமைப்பின்

(World  Memon Organisation) பிரபல  பிரமுகராகவும் அவரது பெரு நிறுவன  சாதனைகளுடன் மேமன் சமூகத்தின  நன்மதிப்பைப் பெற்றதொரு தலைவராகவும் விளங்குகிறார்.

    எம்.எஸ்.எம்.முன்தஸிர்

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...