ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா பொறுப்பேற்பு

Date:

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா நாட்டின் புதிய பிரதமராக இன்று (01) பொறுப்பேற்றுள்ளார்.

தொடர் மோசடிக் குற்றச்சாட்டுகளால் பிரதமர் புமியோ கிஷிடா பதவி விலகப்போவதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தார். எனவே, கடந்த 27ஆம் திகதி ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி அதன் தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பை நடத்தியது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை 9 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். இதில் அவர் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சானா டெய்ச்சியுடனான கடுமையாக போட்டியிட்டு, இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பின்னரே கட்சி தலைமைக்கான போட்டியில் வெற்றி பெற்றார்.

அத்தோடு, ஜப்பானில் எதிர்வரும் 2025 ஒக்டோபர் அல்லது அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...