தாக்குதலில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாரின் உடல் இரகசிய இடத்துக்கு மாற்றம்!

Date:

படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தரப்பால் உறுதிப்படுத்தப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யஹ்யா சின்வாரின் உடல் ஒரு மறைவான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் அவருடைய இறந்த உடல் மரண பரிசோதனை செய்யப்பட்டு மறைவான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எதிர்காலத்தில் இந்த உடலை வைத்து ஹமாஸ் இயக்கத்தோடு பேரம் பேசுவதற்கு ஒரு துரும்பாக  இவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மரண விசாரணை அறிக்கை தகவலின் படி,  சின்வார் அவர்களுடைய தலையிலே மிகத்தூரமாக இருந்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுதாகவும் அவரது உடலில் பல்வேறு இடங்களிலும் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் அதனாலேயே அவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார்.

இதையடுத்து ஹமாஸ் படையின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார்.

இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...