Saudi Agriculture Expo 2024 கண்காட்சி: தென்னைப் பொருட்களை உற்பத்தி செய்யும் 10 இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு!

Date:

Saudi Agriculture Expo 2024 கண்காட்சி கடந்த 21 முதல் 24 வரை சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில் தென்னை தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் 10 இலங்கை நிறுவனங்கள் முதல் தடவையாக பங்குபற்றின.

இதன்போது ‘கண்காட்சியில்10 இலங்கை நிறுவனங்களின் முதல் பங்கேற்பை ஏற்பாடு செய்து, திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தென்னைப் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இலங்கை நிறுவனங்கள் சிறந்த வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இக்கண்காட்சிக்கு, மன்னர் அப்துல் அஸீஸின்  நிர்வாகக் குழுத் தலைவரும், சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அமைச்சகத்தின் துணை நிரந்தரச் செயலருமான டாக்டர். ஃபர்ஹான்,  சவூதி அரேபிய வர்த்தக சம்மேளனத்தின் துணைத் தலைவரும் சவூதி NAF குழும நிறுவனங்களின் தலைவருமான அல்ஷெய்கி மற்றும் ஃபயேஸ் அல்-ஷாஹீலி ஆகியோர் ஆகியோர் இலங்கை சார்பான கண்காட்சியில் பார்வையிட்டனர்.

41வது Saudi Agriculture Expo 2024  கண்காட்சியில் 29 நாடுகளில் இருந்து 370க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...