இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள அவசரகால நிலை காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை லெபனான் தலைநகர் பேய்ரூட் உட்பட அந்நாட்டின் தென் பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லாஹ் அமைப்பிற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வரும் தளங்களை இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பேய்ரூட்டின் தஹியா மாவட்டத்தில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதி ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த இடமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.