லெபனானின் வங்கிக் கிளைகளைக் குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்

Date:

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திப் பிரகாரம், இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை  ஆதரிக்கும் வங்கி கிளைகளைக் குறிவைத்து லெபனானில் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (21.10.2024) 16 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அல்-கார்ட் அல்-ஹசன்  கிளைகளைக் கொண்ட கட்டிடங்களை  இலக்கு வைத்து  தாக்குதல் நடத்தப்பட்டன . பெய்ரூட் (Beirut) விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வங்கி கிளைகள், ஹிஸ்புல்லாவின் நிதி நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார். “ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடியாக நிதியளிக்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...