வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரியும் அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் நடவடிக்கை!

Date:

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களிலும் உயர்ஸ்தானிகராலயங்களிலும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் உடனடியாக தவல்களை வழங்குமாறு கேட்டிருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் சிறிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காக புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக நிமியக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்திடம் ஊடகவியலாளர் ரிப்தி அலி கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னைய அரசாங்க காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளினதும் புதல்வர்களும் உறவினர்களும் வெளிநாட்டு தூதுரகங்களின் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தூதுவர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள்  நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அவர்கள் முன் இருப்பதாகவும் தூதுவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...