வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

Date:

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் கிருமி தொற்றுகள் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால்  விரைவில்  சிகிச்சை பெறுமாறு பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் உண்ணும் உணவுகள் சுத்தமாகவும், புதியதாகவும், சூடாகவும் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சுட்டாறிய நீரை  அல்லது போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நீரை அருந்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...