இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது!

Date:

ராகம பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவர் 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, மட்டுமாகல பகுதியல் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (07) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரின் பிள்ளையை 2025 ஆம் கல்வியாண்டுக்காக தரம் 01 இல் சேர்ப்பதற்கு குறித்த பெண் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளார்.

இந்த நிலையில், பாடசாலை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை 04.00 மணியளவில் இலஞ்சம் பெற்ற வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபரை கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...