இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது!

Date:

ராகம பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவர் 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, மட்டுமாகல பகுதியல் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (07) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரின் பிள்ளையை 2025 ஆம் கல்வியாண்டுக்காக தரம் 01 இல் சேர்ப்பதற்கு குறித்த பெண் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளார்.

இந்த நிலையில், பாடசாலை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை 04.00 மணியளவில் இலஞ்சம் பெற்ற வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபரை கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...