ஓரிரு நாட்களில் பிரதி அமைச்சர்கள் நியமனம்: முனீர் முழப்பருக்கு பிரதி அமைச்சு பதவி?

Date:

முன்னைய அரசாங்கங்களின் நடைமுறையில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க மாட்டாது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 பிரதி அமைச்சர்களை ஓரிரு நாட்களில் நியமிக்கும் என்று அமைச்சர் ஒருவர் நேற்று (18) தெரிவித்தார்.

புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சில அமைச்சரவை இலாகாக்களுக்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களே தவிர அனைத்து அமைச்சுக்களுக்கும் நியமிக்கப்படமாட்டார்கள். அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள், மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவைத்  தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஷ்ஷெய்க் முனீர் முழப்பருக்கு பிரதி அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

109,815  வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய இவர் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி பயின்று பட்டதாரியாகி சக வாழ்வுக்கான பணிகளில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வருகிறார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் நளீமி ஒருவர் பாராளுமன்றம் செல்வது இதுவே முதற்தடவையாகும்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...