நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க தீர்மானம்?

Date:

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிஹால் கலப்பத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிஹால் கலப்பத்தி 125,983 வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்திலிருந்து அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்தாவது பாராளுமன்றத்தின் ஆளுங் கட்சியின் பாராளுமன்ற சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதி சபாநாயகராக நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் 21ம் தேதி சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

சபைத் தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டு எம்.பி.க்களையும் அரசாங்கம் அறிவித்த பின்னர், அந்த இரண்டு பெயர்களும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் நம்பிக்கையைப் பெறும் உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...