13, 14 ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு விடுமுறை !

Date:

எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக 13 ஆம் திகதி  அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமையும் 14 ஆம் திகதி வியாழக்கிழமையும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள  ஆரம்பிக்கப்படும்.

இந்தத் தீர்மானம் குறித்து  தேர்தல்கள் ஆணைக்குழு, மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் பணிகளுக்காக பாடசாலை மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டபங்களை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும்  கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கையின் அடிப்படையில், வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...