காலி முகத்திடலில் சமூக நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு..!

Date:

காலி முகத்திடலை மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக மாத்திரமின்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் நிபந்தனைகளுடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி  இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் காலி முகத்திடலை சமய நடவடிக்கைகள் அல்லாத ஏனைய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி இல்லை என்ற தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் காலி முகத்திடலில்  சமூக நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை  தளர்த்தியுள்ளது.

காலி முகத்திடலை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் மாதாந்தம் 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...