சட்டவிரோதமாக வாக்காளர்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட 3 பஸ்கள்; சாரதிகள், நடத்துனர்கள் கைது

Date:

தேர்தல் சட்டத்தை மீறி, நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக மூன்று பஸ்கள் தயார் நிலையில் இருந்த நிலையில், அவற்றின் மூன்று சாரதிகள் மற்றும் மூன்று நடத்துனர்கள் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 83 (1)ஆ பிரிவின் பிரகாரம் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் மணல்தோட்டம், ஏஜி முகாம், ஏத்தாளை, கல்பிட்டி, மாம்புரி ஆகிய இடங்களில் வசிக்கும் 25 தொடரக்கம் 45 வயதுடையவர்கள்.

சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...