சர்ச்சைக்குரிய சஜித் அணியின் தேசிய பட்டியல் ; வெளியான வர்த்தமானி அறிவிப்பு

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் கட்சிக்குள் கடும் கருத்து மோதல்கள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்னும் 4 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேசியப் பட்டியல் உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...