தபால்மூல வாக்கை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

Date:

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த நாட்களில் தபால்மூல வாக்கை பதிவு செய்ய முடியாதவர்கள் இன்றும் (07) நாளையும் (08) தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனால், இந்த 02 நாட்களில், அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

ஏழு இலட்சத்து முப்பத்து எட்டாயிரத்து ஐம்பது (738,050) தபால்மூல வாக்காளர்கள் இவ்வருட நாடாளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த 30ஆம் திகதி முதல் கடந்த 4ஆம் திகதி மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல்துறை ஆகியவற்றில் தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்தனர்.

இம்மாதம் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டது.

தபால் மூலம் வாக்களிக்கும் போது அடையாளத்தை சரிபார்க்க ஐந்து செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...