தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கட்சிகளின் செயலாளர்களுக்கு நேற்றையதினம்  அனுப்பப்பட்டுள்ளதாகத் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 18 தேசியப்பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அந்த கட்சியினால் தெரிவுசெய்யப்படும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் இன்றையதினம் (17) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசியப்பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், அதற்கான தமது பிரதிநிதிகளை நியமனம் செய்யும் பணிகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் எனக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஜனநாயக முன்னணி 02 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், இதற்காக நியமிக்கப்படவுள்ள பிரதிநிதிகள் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

இதனிடையே பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்துள்ள ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அக்கட்சியின் பொதுச் செயலாளரால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், சர்வஜன அதிகாரம் கட்சியினால் நியமிக்கப்படவுள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நாளையதினம் (18) தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், நியமிக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இன்று அல்லது நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என அந்த கட்சியின் செயலாளர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ள நிலையில், அதற்காக நியமிக்கப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...