பிரதமரை சந்தித்தார் ஐ.நா.வின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி

Date:

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார்

இதன்போது இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் ஆண் பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் UNFPA அமைப்பின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிசெய்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் ஆண் பெண் சமத்துவம், மகளிரின் பொருளாதார செயற்பாடுகள், ஆண் பெண் சமூகத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை கையாள்கை மற்றும் இலங்கையில் மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பதற்கான தீர்மானமிக்க பணிகள் குறித்தும் அவதானம் செலுத்தினார்.

மேலும் கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் காணப்படுவதுடன், தீர்மானம் எடுக்கும் களத்தில் அவர்களின் தலையீட்டை அதிகரிப்பதில் கூடுதல் அவசியம் காணப்படுவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, இலங்கைக்கான UNFPA அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டாண்மை மற்றும் ஆலோசனை பகுப்பாய்வாளர் அனுஷிகா அமரசிங்க, தேசிய வேலைத்திட்டத்தின் பகுப்பாய்வாளர் – ஆண் பெண் சமூகத்தன்மை/GBV பிமலீ அமரசேகர, இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பணிப்பாளர் திலினி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...