யூடியூபர் அஷேன் சேனாரத்னவுக்கு எதிராக விசாரணை!

Date:

பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான அஷேன் சேனாரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் ஊழலில் ஈடுபட்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் தொடங்கியுள்ளன.

அத்துடன், சம்பந்தப்பட்ட வாக்குமூலத்தைப் பெற, கடந்த 12ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அஷேன் சேனாரத்னவை அழைத்திருந்தனர். எனினும், அவர் அன்றைய தினம் ஆஜராகாததால், மற்றொரு திகதியை கேட்டுள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் இருந்து வேட்புமனு கோரியிருந்த அஷேன் சேனாரத்னவின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அதிகாரிகளை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...