அக்குரணையில் மீண்டும் வெள்ளம்..!

Date:

வங்காள விரிகுடாவில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, அக்குரணை பிரதேசம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அக்குரணை 6ஆம் கட்டை, கண்டி- யாழ்ப்பாணம் வீதி, வெள்ளத்தில் மூழ்கி வருவதாகவும் பிரதேசத்தில் உள்ள கட்டடங்களில் இருந்து பொருட்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,  எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று மாலை வேளையில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...