இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது!

Date:

ராகம பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவர் 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, மட்டுமாகல பகுதியல் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (07) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரின் பிள்ளையை 2025 ஆம் கல்வியாண்டுக்காக தரம் 01 இல் சேர்ப்பதற்கு குறித்த பெண் அதிபர் இலஞ்சம் கோரியுள்ளார்.

இந்த நிலையில், பாடசாலை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை 04.00 மணியளவில் இலஞ்சம் பெற்ற வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபரை கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...