சர்ச்சைக்குரிய ரவி கருணாநாயக்கவின் தேசிய பட்டியல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Date:

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பான சர்ச்சைகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அப்பாற்பட்டது.

கட்சியின் உள்விவகாரங்களில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கட்சியின் செயலாளரால் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு தனது கடமையை நிறைவேற்றியுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய முடியாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ரவி கருணாநாயக்கவை தேசியப் பட்டியலில் எம்.பி.யாக நியமிப்பது குறித்து தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

எனினும், இந்த நியமனம் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதானால் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...