ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகருக்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பு!

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் புதிதாக பதவியேற்ற இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் அன்தலிப் எலியாஸ் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யா தலைமையகத்தில் 7ஆம் திகதி இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களால் ஜம்இய்யாவின் பணிகள், செயற்பாடுகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டதோடு, இலங்கை வாழ் முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்தும் தெளிவுகள் அளிக்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் அவர்கள்,

பங்களாதேஷ் முஸ்லிம்களின் பூர்வீகம் மற்றும் வரலாறு தொடர்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதோடு, இலங்கை நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்தோடும் சிறப்பாக வாழ்வதற்கு தனது முயற்சிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்கள்.

இக்கலந்துரையாடலின் இறுதியில், உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு ஜம்இய்யாவின் வெளியீடுகள் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...