களுத்துறை மாவட்ட பாடசாலையொன்றில் இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்தர வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான 05 வினாக்கள் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கான தொடர்பு இல்லை என்றும், குறித்த வினாத்தாள் அந்த பாடசாலையால் தயாரிக்கப்பட்டது என்றும் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் தொடர்பான உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.