பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்: வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு!

Date:

பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 21க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், காயமடைந்த பயணிகளில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது தவிர அங்கு பிரிவினைவாத கிளர்ச்சியும் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...