பார்வைக் கோளாறுக்கு எதிரான சவூதியின் தன்னார்வ திட்டம்: வலஸ்முல்லயிலும் காத்தான்குடியிலும் வெற்றிகரமாக நிறைவு

Date:

சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவின் அடையாளமாக, உலகளவில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்குவதற்கான சவூதி அரசின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கான முக்கிய அங்கமாக, மன்னர் சல்மான் நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் , இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள காத்தான்குடி அரச மருத்துவமனையில், கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வத் திட்டத்தை 2024 நவம்பர் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேபோன்ற ஒரு தன்னார்வத் திட்டம், 2024 நவம்பர் 3 முதல் 9ஆம் திகதி வரை, இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள வலஸ்முல்ல பிரதேசத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தினூடாக பல ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பரிசோதித்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, தேவைப்படுமிடத்து அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல் , தேவையான மருந்துகளை வழங்குதல், வெண்படலங்களை அகற்றுதல், கண்ணீர் குழாய்களில் ஏற்படும் தடுப்புக்களுக்குச் சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றை வழங்குதல் போன்ற செயல்பாடுகளும் இடம்பெற்றன.

நவம்பர் 11ஆம் திகதி இத்திட்டத்தின் கீழ், பின்வரும் சேவைகள் வழங்கப்பட்டன:

  • மருத்துவ பரிசோதனைகள்: 3500 நோயாளிகளுக்கு பரிசோதனைகள்.
  • கண்ணாடி விநியோகம்: 550 நோயாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள்.
  • அறுவை சிகிச்சைகள்: 215 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...