புதன்கிழமை முதல் கடவுச்சீட்டு பெற Online பதிவு அவசியம்!

Date:

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி. நிலூஷா பாலசூரிய தெரிவித்தார்.

இந்த இணையவழி முறைமை நாளை மறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும் எனவும், ஏற்கனவே வரிசைகளில் நின்றவர்களுக்கு இந்த மாதத்திற்கான திகதி, நேர ஒதுக்கீடுகள் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, டிசம்பர் மாதத்திற்கான திகதி,நேர ஒதுக்கீடுகளை இதன் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, அவசரமாக கடவுச்சீட்டை பெற வேண்டிய தேவையுடையவர்கள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...