மழையால் 3வது போட்டி ரத்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

Date:

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை 2-0 என கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 21 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அரை சதம் கடந்து 56 ரன்னும், ஹென்ரி நிகோலஸ் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்

கடும் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...