முதல் T-20 ஆட்டம் இன்று: இந்தியா தென்னாப்பிரிக்கா இடையில் மோதல்!

Date:

4 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
இந்தத் போட்டி இன்று (நவ. 8) தென்னாப்பிரிக்காவின் டா்படா்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சூர்யா குமார் யாதவ் தலைமை தாங்குகிறார். முன்னணி நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில்இ இந்திய அணி இளம் வீரர்களுடன் இந்த தொடரை ஆரம்பிக்கிறது.

இந்த ஆட்டத்தில்இ புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்திய அணி இந்த தொடரை பயன்படுத்துகிறதுஇ மேலும் இளம் வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளது.

பேட்டிங் வரிசையில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வார்மா, ரிங்கு சிங் ஆகியோர் முக்கிய வீரர்களாக விளங்குகின்றனர். ஆல்-ரவுண்டராகஇ அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர படேல் அணியில் உள்ளனர்.

பவுலிங் வட்டாரத்தில்இ அஷ்வின், ஆவேஷ் கான், வருண் சக்கரவர்த்தி, யஷ் தயால் மற்றும் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் எதிரணி பேட்டர்களை சவால் எடுத்து, வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்தியா கடந்த ஜூன் மாதம் டி20 உலக கோப்பையின் இறுதியில் தோல்வி அடைந்தது, இதனால் இன்றைய ஆட்டத்திற்கு ஒரு பதிலடி தரும் எண்ணத்தோடு தென்னாப்பிரிக்கா அணி விளையாடுகிறது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...