வெளியானது தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள்

Date:

பொதுத் தேர்தல் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்திக்குக்   கிடைக்கப்பெற்ற 18 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்கவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிமல் ரத்நாயக்க, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி அநுர கருணாதிலக்க, பேராசியரியர் உபாலி பன்னிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அருண ஜயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியபெரும, ஜனித ருவான் கொடிதுவக்கு, ஸ்ரீ குமார ஜயகொடி, நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, லக்மாலி காஞ்சனா ஹேமரத்ன, சுனில் குமார கமகே, காமினி ரத்நாயக்க,

மற்றும் பேராசிரியர் ருவான் சந்திம ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா, அபுபக்கர் ஆதம் பாவா மற்றும் ரத்நாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...