2024 நாடாளுமன்ற தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இம் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகிறது.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த முதலாம் திகதியும் நான்காம் திகதியும் முப்படையினரும் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

குறித்த மூன்று தினங்களிலும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நேற்றும் (07) இன்றும் (08) வாக்களிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள்

மத்திய வங்கிக்கு இரு புதிய பிரதி ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியமைச்சர் என்ற...

கானா தங்க மோசடியில் தொடர்பு; ஹிஸ்புல்லாஹ் எம்.பி மறுப்பு

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்...

சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் கைப்பற்றியது.

சூடான் இராணுவத்தின் முக்கிய நிலையை துணை இராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது. அந்த...

நாட்டின் பல இடங்களில் 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல முறை மழை...