2024 பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

Date:

பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அமைதியும் சுதந்திரமுமான தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

பொதுமக்கள் தமது வாக்களிக்கும் ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், நேர காலத்தோடு சென்று வாக்களித்து,  வீடுகளுக்கு சென்று அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் நாளை 14ஆம் திகதி பிற்பகல் 4:15 மணியளவில் ஆரம்பமாகுமென்றும் அன்று நள்ளிரவு முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலுடன் சம்பந்தப்பட்ட மீதியான தினங்களிலும் அமைதியாக செயல்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்ததுடன் தேர்தல் தினத்தில் ஏதாவதொரு வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டால் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகள் ரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

 

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளிலும் பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு  நடவடிக்கைகளிலும் முழுமையான நம்பிக்கை வைக்குமாறு அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

 

அந்த வகையில் தேர்தல் தொகுதி மட்ட பெறுபேறுகள் மற்றும் மாவட்ட ரீதியான பெறுபேறுகள் தேர்தல்கள் செயலகத்தில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னரே ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என தெரிவித்த அவர், உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் தினத்தன்று தபால் மூல வாக்குகளை என்னும் நடவடிக்கைகளை அன்றைய தினம் பிற்பகல் 4:15 மணிக்கு ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் கிடைத்ததும் இரவு 7.15 மணியளவில் வாக்குகளை என்னும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

 

வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் பெறுபேறுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியர்களுக்கான அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள மத குருமார்களுக்கான அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடனான கடிதம், விசேட தேவையுடையோருக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

 

அதனைத் தவிர அரசாங்க நிறுவனங்களில் வழங்கப்படும் அடையாள அட்டைகள் ஊடகத்துறை அடையாள அட்டைகள் வாக்களிப்புக்கு செல்லுபடியாகாது.

 

வாக்களிப்பு நிலையங்களில் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல், தொலைபேசிகளை பயன்படுத்தல், போதைப்பொருள் பாவனையுடன் வாக்களிக்க வருகை தரல், ஆயுதங்களை வைத்திருத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையத்துக்கு உட்பட்ட 500 மீற்றர் சுற்றாடலில் வாக்கு கோருவது, குறிப்பிட்ட தரப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என கோருவது, துண்டுப் பிரசுரங்களை வழங்கல், சின்னங்களை காட்சிப்படுத்தல் உட்பட எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்களும், ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்குச் சீட்டுக்களும் வழங்கப்படும்.

வாக்காளர் ஒருவர் கட்சியொன்றுக்கு அல்லது தாம் விரும்பும் சுயேட்சைக் குழுவுக்கு வாக்களிக்க முடியும். அதன் பின்னர் புள்ளடியிட்டு மூன்று வேட்பாளருக்கு விருப்பு வாக்குகளை அளிக்க முடியும்.

 

 

தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் புள்ளடியை மாத்திரம் இடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் இலக்கங்களை இடுவது தொடர்பில் சில சிக்கல்கள் இருந்தன. புள்ளடி இடும் முறையை எமது மக்கள் நன்கு அறிவார்கள். நீண்டகாலமாக பின்பற்றும் இந்த முறையை பின்பற்றுமாறு கோருகிறோம்.

அரச ஊழியர்களுக்கு குறைந்தப்பட்சம் 04 மணி நேரம் விடுமுறை வழங்க வேண்டும்.

இது தனியார் ஊழியர்களுக்கும் பொருந்தும். வாக்காளர் ஒருவர் 40 கிலோமீட்டருக்கு உட்பட்டவராக இருந்தால் அரை நாள் விடுமுறையும், 40 முதல் 100 கி.மீ. க்கு உட்பட்டவராக இருந்தால் ஒருநாள் விடுமுறையும், 100 முதல் 150 கி.மீ. வரை இருந்தால் ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கி.மீ. க்கு மேல் இருந்தால் தூரத்தின் பிரகாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

வாக்களித்த பின்னர் வாக்குச் சாவடிகள் மற்றும் வீதிகளில் கூடியிருக்க வேண்டாம். வீதியில் ஒன்றுகூடி தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் வாக்கை உரிய வகையில் எண்ணி பெறுபேறுகளை வெளியிடும் முழுமையான பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்றுள்ளது. அந்த வகையில் வாய்மூல தகவல்களை நம்ப வேண்டாம். ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ தகவல்களை நம்புமாறு கோருகிறோம்.

மூன்று கட்டங்களாக வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறும்.முதலில் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள வாக்குகள் எண்ணப்படுவதுடன் இரண்டாவதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் பெற்ற வாக்குகளின் எண்ணப்படும்.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...